Thursday, 10 September 2015
பெயர் மட்டுமே வாழ்க்கை
வானவியல் ASTRONOMY
வானவியல் என்பது கிரகங்களின் சஞ்சாரங்களின் செயல்பாட்டை மையமாக கொண்டது. கிரகங்களும் நமக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதைதான் நம் அறிஞர்கள், ஞானிகள், "அண்டத்தில் பிண்டம்", "பிண்டத்தில் அண்டம்" என்று கூறுவர். இந்த அண்டமே உடலாகவும், உடலே அண்டமாகவும் அமைந்துள்ளது.
வானவியல் என்னும் வான சாஸ்திரம் என்னும் ஒரு பகுதி வான சாஸ்திரம் என்றும் மற்றொரு பகுதி பஞ்சபூதமாகவும் அமைந்துள்ளது. பஞ்சபூதங்களால் ஆனது உடல். இந்த பஞ்சபூதங்களை இயக்கும் ஆற்றல் நவக்கிரகளுக்கு உண்டு. பஞ்சபூதமின்றி நவக்கிரகங்கள் இல்லை.
நவக்கிரகங்கள் இன்றி பஞ்சபூதங்கள் இல்லை. எங்கும் வியாபித்திருக்கும் இந்த களம் இரண்டு பிரிவாக அமைந்துள்ளது.
1. சிவ களம்
2. சக்தி களம்
சிவகளத்திலிருந்து தான் சக்தி களம் தோன்றியது. சக்தி களம் இல்லாமல் சிவகளத்தை உணர முடியாது. இதையே தான் "சக்தி இல்லையேல் சிவமில்லை, சிவமில்லையேல் சக்தியில்லை" என்பர். சிவனுக்குள் சக்தி அடக்கம்.
சிவகளம் என்பது சுத்தவெளி, இயக்கமற்ற நிலை, சக்தி களம் என்பது இயங்கும் நிலையில் உள்ள கிரகங்கள், கிரகங்களின் செயல்பாடுகளின் தொகுப்பு பூமி. பூமியில் உள்ள உயிர்கள் அனைத்தும் சக்தி களத்தில் அடங்கும். இந்த சக்தி களத்தினை மையமாக வைத்து தான் வான சாஸ்திரம் உருவானது. இது ஒரு கருவிலே திருவுடைய ஒருவரால் மட்டுமே சாஸ்திரம் தோன்றியிருக்கும் என்று கூறுகிறோம். பொதுவாக சாஸ்திரம் என்பதே இந்த சமூகத்தை வழி நடத்தும் ஒரு களமே அமையப் பெற்றுள்ளது. ஒருவர் பெற்ற இன்பத்தை பிறர் அனுபவிக்க ஆராய்ச்சி செய்து மிக துல்லியமான நுணுக்கமான அரூபமான கருத்துக்களை கொண்டுள்ளது. இதுபோன்ற வானசாஸ்திர ஆராய்ச்சிகளுக்கு அளவுகோல் என்பது தன்னிலையைச் சார்ந்தது. ஆராய்ச்சி செய்யும் நபர் எத்தகைய தனித்தன்மையோடு அவ்வளவுவிதமான கற்றறிந்த செயல்பாடுகளின் தன்மையை பொருத்தது. அவருடைய தரத்தையும் குணத்தையும் சார்ந்து இருக்கும். இத்தகைய ஆராய்ச்சிகளுக்கு திடமான விதிகளோ மாறாத சட்டதிட்டங்களோ கிடையது. உணர்ச்சி சார்ந்தது என்றால் இத்தகைய உணர்ச்சியின் வெளிபடுகளாக இருந்தாலும் 50% அறிவு சார்ந்தும் அமையும் பெளதீக ஆராய்ச்சியில் 100% அறிவு சார்ந்து அமையும். அதனால் தான் பெளதீக ஆய்வாளர்களால் வானசாஸ்திர ஆய்வுகளை ஏற்றுக் கொள்ளமுடியாது. அவர்களின் ஆய்வுகளும் வேறு. இலக்கியத்தின் ஆய்வுகளும் வேறு. மிகத் துல்லியமான ஆய்வு களத்தில் (பெளதீக) வானசாஸ்திர ஆராய்ச்சிகள் செய்ய முயன்றாலும் துல்லியமாகக் கூற இயலாத நிலையே அமைந்துள்ளது. வான சாஸ்திரத்தை உணர, அனுபவிக்க உணர்ச்சி பூர்வமான செயல்பாடும், அறிவு சார்ந்த செயல்பாடும் அவசியம்.
50% உணர்ச்சியும் 50% அறிவும் தேவை. இது எனது அனுபவபூர்வமான உண்மை. அறிவியல் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. ஏற்றுக் கொள்ளாமல் இருக்கவும் முடியாது. நான் டிவி-யில் (விஐய்) பேசிய தலைப்பு. அன்று வியாதியை பற்றியது. இனிசியலில் R மட்டும் வருமானால் பெயரில் ஆரம்ப எழுத்து R ஆக வரும் நபர்களுக்கு 90% சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. அதே போல் அனேக வியாதிகளை பற்றியும் பேசி இருந்தேன். அந்த நிகழ்ச்சிகளையும் பற்றியும் பேசி இருந்தேன். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு வாரம் கழித்து ஸ்ரீ ஹரி கோட்டாவிலிருந்து ஒரு அறிவியல் அறிஞர் (Scientist) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எனது நிகழ்ச்சியை பார்த்ததாகவும் அவருக்கு இனிசியல் R வந்துள்ளதால் தனக்கு சர்க்கரை வியாதி இருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கு பிறகு அவரது நண்பர்கள் உறவினர்கள் என எல்லோருடைய பெயரையும் ஆய்வு செய்து பார்த்த பொழுது நீங்கள் கூறியபடி சரியாக உள்ளது. என்னால் இதை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை என்று கூறுகிறார். இதை எதற்கு இங்கு கூறுகிறேன் என்றால் பெளதீக ஆய்வில் இத்தகைய ஆய்வுக்கு 50% மட்டுமே நம்பிக்கை இருக்கும், ஏனென்றால் இது இலக்கிய ஆய்வை மையமாக கொண்டு செயல்படுகிறது.
இவ்வாறு வானவியல் வான சாஸ்திரம் கூறிக்கொள்கிறார்கள்.
சிவகளமில்லாமல் சக்தி களத்தில் நவக்கிரகங்களுள்.
1. சூரியன்
2. புதன்
3. சுக்கிரன்
4. சந்திரன்
5. செவ்வாய்
6. குரு
7. சனி
8. ராகு
9. கேது
10. யுரேனஸ்
11. நெப்டியூன்
12. புளூட்டோ
சக்தி களதில் உள்ள நவக்கிரகங்களுக்கும் நமக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
சூரியன் - எழும்போடும்
புதன் - தோல்களோடும்
சுக்கிரன் - ஜீவ விந்து குழம்போடும்
சந்திரன் - ரத்தத்தோடும்
செவ்வாய் - ரத்தத்தில் உள்ள சிக்கப்பணுக்களோடும்
குரு - மூளையோடும்
சனி - நரம்புகளோடும்
ராகு,கேது - மனதோடு
என நெருங்கிய தொடர்புகளை கொண்டது.
இந்த தொடர்பை நாளமில்லா சுரப்பிகள் ஏற்படுத்துகின்றன.
குரு - Cerebral Cortex - துரியம்
சூரியன் - Convernous Plexy - ஆக்கினா
புதன் - Pineal Gland - மனோன்மணீயம்
சந்திரன் - Pharyngeal Plexy - விசுக்தி
சுக்கிரன் - Cordiac Plexy - அனாகதம்
சூரியன் - Solar Plexy - மூலாதாரம்
சனி செவ்வாய் - Coccygeal Plexy - மணிபூரம்
ராகு, கேது - Hypogaestric Plexy - சுவாதிஸ்டோள
இவ்வாறு நாளமில்லா சுரப்பிகளுக்கும், உடலுக்கும் உள்ள தொடர்பும் நாளமில்லா சுரப்பிகளுக்கும் இடையே உள்ள தொடர்பையும் நன்கு உணர்ந்தவர்களால் மட்டுமே நோயைப் பற்றியும் நோயின் மூலத்தையும் கண்டறிய முடியும். இன்று அலோபதி மருத்துவ அறிஞர்கள் நாளமில்லா சுரப்பிகள் உள்ளது என ஏற்றுக் கொண்டுள்ளனர். அன்று அதைப்பற்றி துணித்துனரவோ மேலும் ஆய்வுகளையோ செய்யவில்லை. இதனால் தான் அலோபதி மருத்துவத்தால் நோயை கட்டுப்படுத்த முடிக்கிறதே அன்றி குணப்படுத்த இயலவில்லை. நாளமில்லா சுரப்பிகளை நம் முன்னோர்கள் ஞானிகளும் முனிவர்களும் தன் கையசைவினாலும் நாளமில்லா சுரப்பிகளை தொடுவதாலும் வியாதியை குணப்படுத்தி மகிழ்வித்தனர்.
இவ்வாறு கிரகங்களுக்கும் நமக்கும் இடையே உள்ள தொடர்புகளை அறிந்தோம். எத்தகைய மாற்றங்களைத் துன்பங்களை ஏற்படுத்துகிறது என்பது வான இயலின் அடுத்தக் கட்டசிந்தனையாக எடுத்துக்கொள்வோம்.
ஏற்கனவே நான் கூறியபடி கிரகங்களும் சரி உடலும் ஒன்றுக் கொன்று தொடர்பு இருக்கும் பட்சத்தில் ஒரே மாதிரியான சமூகம் இல்லையே. ஒவ்வொருவரும் ஒவ்வொரு செயல்பாடுகளும், சிந்தனைகளும், உடல்வாகுகளும் அமைந்துள்ளன. என்ன காரணம்? இதைத்தான் வான இயலில், உடலியலுக்கும் உள்ள தொடர்புகளின் விளைவுகள்.
உடலை பொருத்த வரை மூன்று பாகமாக பிரிக்கிறோம். ஒன்று ஸ்தூல உடல், சூக்கும உடல், காரண உடல். அதாவது பரு உடல், உயிருடல், மன உடல் என்பன.
மன உடலை மூன்று பிரிவாக பிரிக்கலாம். 1. ஆழ்மனம், 2. அடிமனம், 3. மேல் மனம், என்பன. உயிருடல் நம் உடலை சுற்றி ஒரு களம், மன உடல் நம் உடலை சுற்றி மற்றொரு களம். இதைதான் இலக்கியவாதிகள் கண்ணுக்கு தெரிபவை மட்டூம் உண்மையானது அல்ல. கண்ணுக்கு தெரியாத பல உண்மைகளும் உள்ளன என்பர். இதனால் தான் இத்தகைய ஆய்வுகளை மதிப்பீடு என்பது சமூக மதிப்பீடு மட்டுமே எடுத்துக்கொள்ளமுடியும்.
அறிவியல் மதிப்பீடாக கொண்டால் குழப்பமே மிஞ்சும். அறிவியல் மேதைகளும் குழம்பிதான் ஆகவேண்டும். அறிவியல் பார்வையில் மனம் எங்கு உள்ளது என்று கேட்டால் உயிர் எங்கு உள்ளது என்று கேட்டால் என்ன பதிலாக இருக்கும். மனம் நோகிறது என்கிறோம். மனதில் பதியவை என்கிறோம். உயிர் உள்ளது என்கிறோம். இவ்வாறு உண்மையானதா? பொய்யானதா? என நமக்குள்ளும் கேட்போம். அறிவியல் பார்வையாலும் வைப்போம்.
மனதையும், உயிரையும், பொருத்தவரை அறிவியல் ஆய்வுகளால் சான்றுகளை கொண்டு உறுதியான மாறாத ஆய்வு முடிவுகளை பெற முடியுமா?
செய்முறை கூடங்களில் சான்றுகள் திரட்ட முடியுமா? உயிர் இத்தனை அளவு உள்ளது. மனம் இத்தனை அளவு உள்ளது என கூற முடியுமா? ஏன் இதை கூறுகிறோமென்றால் அறிவியல் செல்லும் பாதை வேறு? ஆன்மிகம் இலக்கியம் செல்லும் பாதை வேறு. இரண்டும் இரண்டு தண்டவாளங்களை போன்றது. எந்த ஒன்று மட்டும் வளர்ந்தாலும் சுகமாக பிரயாணம் செய்ய முடியாது.
அறிவியலும் தேவை. ஆன்மீகமும் தேவை. தேவை என்பது உணர்பவர்களைப் பொருத்த விஷயம்.
இன்று வானவியல் என்ற ஒரு தொகுப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இன்று சந்திர கிரகணம். சூரிய கிரகணம் நாட்கள் மாதங்களாய், பருவங்கள் அனைத்தும் நம் முன்னோர்கள் மிக துல்லியமாக கணித்து வைத்துள்ளனர். இன்று அறிவியல் அறிஞர்களும் அதைத்தான் பின்பற்றுகின்றனர். அன்று, தவறு என்று கூறி தூக்கி எறியவில்லையே. இன்று தொலைநோக்கு கருவிகளையும், சேட்லைட் கருவிகளையும் கொண்டு கிரங்களை பார்க்கிறோம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள், கிரகங்களையும் அதன் செயல்பாடுகளையும் மிக துல்லியமாக கூறி வைத்திருக்கின்றனரே சிந்திப்போம்.
இவ்வாறு கிரகங்களின் தாக்கமும், பஞ்சபூதங்களின் தாக்கமும் இம்மண்ணுலகில் மக்களை பலவாறு ஆட்டிப்படைக்கின்றது. இதையே வானவியல் ஆய்வுகளை நிகழ்த்தும். அறிஞர் பெருமக்கள் மிகவும் அடக்கமாக செயல்படுகிறார்கள். பிரபஞ்சத்தை நாம் இயக்குகின்றோமா? பிரபஞ்சம் நம்மை இயக்குகின்றதா? என்ற கேள்விகள் பலவாறு எழுந்து அறிஞர்களையும், ஞானிகளையும் மனதில் குழப்பி கொண்டுதான் உள்ளனர்.
இயற்கையோடு நாம் ஒன்றிதான் வாழக் கற்கிறோம். அதையே தான் எண் கணிதமும் கூறுகிறது. இயற்கைக்கு புறம்பான இயற்கைக்கு புறம்பாக வாழ எந்த சாஸ்திரமும் தோன்றவில்லை. எண் கணிதத்தில் ஒரு எழுத்தை நாம் உபயோகிக்கும் முறையில் கூறும் பொழுது அந்த எழுத்து உள்முகமாக ஒரு அதிர்வலையையும், வெளி அதிர்வலையையும் அதாவது அக அதிர்வலை, புற அதிர்வலை என கூறலாம். இத்தகைய அதிர்வலைகளை 8 நாளமில்லா சுரப்பிகளை கொண்டு அக அதிர்வலைகளை கணக்கிட்டும் புற அதிர்வாலையை 9 கிரகங்களும் தொடர்புபடுத்தி கூறுகின்றனர்.
இதில் அக அதிர்வாலையை நாளமில்லா சுரப்பிகளில் ஏற்படுத்தும் எழுத்துக்களை வான சாஸ்திர மதிப்பாக கொள்ளப்படும்.
ASTRONOMY VALUE
A, I, Q,Y. - 1
B, K, R. - 2
C, G, L, S. - 3
D, M, T. - 4
E, H, N, X. - 5
U, V, W. - 6
O, Z, - 7
F, P, - 8
இவ்வாறு எட்டு பிரிவுகளாக பிரித்து கணக்கிடப்படுகிறது.
இதை ஒவ்வொருவருடைய பெயரில் எத்தனை அதிர்வாலையை ஏற்படுத்துகிறது என்றால் 3 பிரிவுகளாக பிரித்து செயல்படுகிறது. முறையே இனிசியலில், பெயரில், மொத்த எண்ணில் இத்தகைய தாக்கம் தெரியவரும்.
C. S A N K A R
3. 3 1 5 2 1 2
3 + 14 = 17
இனிசியல் 3 குருவின் ஆதிக்கம்
பெயரில் 14 = 5 புதனின் ஆதிக்கம்
மொத்த எண்ணில் = 17 = 8 சனியின் ஆதிக்கம்
இத்தகைய 3 ஆதிக்கங்களும் ஒருவருடைய பிறந்த தேதியில் உள்ள 4 கிரகங்களோடு அமையவேண்டும்.
பிறந்த தேதியில் 4 கிரகங்களை நாம் எவ்வாறு காண முடியும் என்றால்
ஒருவருடைய பிறந்த தேதி என்பது இறைவனும் நம்மாலும் (பெற்றோர்களால்) தீர்மானிக்கப்படக்கூடியதாக ஒரு குழந்தைக்கு நவக்கிரகங்களின் ஆதிக்கம் முழுமையாக இருந்த போதிலும், எண் கணிதத்தின் வாயிலாக நான்கு கிரகங்களின் அதிக பட்ச ஆதிக்கத்தை ஏற்படுத்தும் பெயரோடும் ஒப்புமைப்படுத்துகிறோம்.
அதிக பட்ச ஆதிக்கம் செலுத்தக் கூடிய கிரகங்களை கண்டறிய 14-05-1980-ல் பிறந்த ஒருவருடைய தேதியின் முதலில்
தேதி, ஒரு கிரகமாகவும்
விதி எண்,ஒரு கிரகமாகவும்
மாதம், ஒரு கிரகமாகவும்
கிழமை,ஒரு கிரகமாகவும்
எடுத்து கொள்ளப்படுகிறது.
பிறந்த தேதி என்பது 14 என்றால் 1+4=5 என்று புதன் கிரகம் எனவும்.
1 வந்தால் சூரியன்
2 வந்தால் சந்திரன்
3 வந்தால் குரு
4 வந்தால் இராகு
5 வந்தால் புதன்
6 வந்தால் சுக்கிரன்
7 வந்தால் கேது
8 வந்தால் சனி
9 வந்தால் செவ்வாய்
என எடுத்துக் கொள்ளவேண்டும்.
விதி எண் என்பது :
பிறந்த தேதி, மாதம், வருடம் அனைத்தும் கூட்டி வரக்கூடிய கூட்டு எண்ணே விதி எண்ணாக கொள்ளப்படும்.
14-05-1980 - 1+4+0+5+1+9+8+0
28 = 2+8 = 1 சூரியன் என விதி எண்ணாக எடுத்துக் கொள்ளவும்.
மாதம் என்பது:
ஒரு பிறந்த மாதம் எதுவோ அதையே கீழ்காணும்படி ஒரு கிரகமாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
ஜனவரி (1) - சனி (8)
பிப்ரவரி (2) - சனி (8)
மார்ச் (3) - குரு(3)
ஏப்ரல் (4) - செவ்வாய் (9)
மே (5) - சுக்கிரன் (6)
ஜூன் (6) - புதன் (5)
ஜூலை (7) - சந்திரன் (2)
ஆகஸ்ட் (8) - சூரியன் (1)
செப்டம்பர் (9) - புதன் (5)
அக்டோபர் (10) - சுக்கிரன் (6)
நவம்பர் (11) - செவ்வாய் (9)
டிசம்பர் (12) - குரு(3)
என 5-வது மாதம் என்றால் மே மாதத்திற்குரிய கிரகம் சுக்கிரன் என எடுத்து கொள்ளவும்.
கிழமையை:
ஞாயிறு - சூரியன் (1)
திங்கள் - சந்திரன் (2)
செவ்வாய் - செவ்வாய் (9)
புதன் - புதன் (5)
வியாழன் - குரு(3)
வெள்ளி - சுக்கிரன் (6)
சனி - சனி (8
என எந்த கிழமையில் பிறந்துள்ளார் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளவும்.
இவ்வாறு 4 கிரகங்களை கண்டுபிடித்து அதற்குரிய கிரகங்களில் எந்த கிரகம் அவருக்கு வலிமையாக உள்ளதோ அந்த கிரகத்தைக் கருத்தில் கொண்டு ஆராய்ச்சிக்குட்படுத்தி அந்த கிரகத்திற்கு ஒப்புமையான கிரகத்தை எடுத்து பெயர் வைக்க கையாளவேண்டும். இதற்கு ஆராய்ச்சி தன்மையினை கொண்டே மிக சிறப்பாக செயல்பட முடியும்.
இனிசியாலஜி (Initiology)
ஒருவருடைய பெயரில் ஆரம்ப எழுத்து எனவும் தந்தையாரின் ஆரம்ப எழுத்து எனவும் எடுத்துக் கொள்வது. இத்தகைய இனிசியலில் எனப்படும் எழுத்திற்கு ஒருவருடைய தலையெழுத்து மற்றும் வல்லமை உண்டு.
இனிசியலாவது முறைப்படி ஒருவருடைய பெயருக்கான பலனை பகுத்துக் கூறும்பொழுது, வெளிப்படும் இனிசியலில் உள்ள கிரகம் ஒருவருடைய கிரகச் சூழலில் ஒரு பாகமாக செயல்படும். ஒருவருடைய பெயர் இயக்கத்தில், இனிசியலுக்கு என்று ஒரு முக்கிய இடம் உண்டு.
இனிசியல் என்பது ஒரு கிரகம் அந்தக் கிரகத்திற்கும் வலிமை உண்டு. அந்த கிரகத்தை மையமாக வைத்து செயல்பாடுகளும் நிகழ்கிறது. அதே கிரகத்தை மையமாக வைத்து நோய்களும் ஏற்படுகிறது என ஆய்வாளர் கூறுகிறார். இங்கு ஆய்வாளர் இனிசியல் என குறிப்பிடுவதற்கு காரணம் குழப்பமில்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே.
பெயர் எண் கிரகம், இனிசியல் எண் கிரகம், மொத்த எண் கிரகம்
ஒருவருடைய உடலில் இனிசியலில், பெயர், மொத்த எண் இம்மூன்றும் ஒன்றன்பின் ஒன்றாக துரியம் எனப்படும் Cerebral Cortex எனப்படும் சக்கரம் வாயிலாக செயல்பாட்டிற்கு தயாராகிறது.
உதாரணத்திற்கு,
G. K U M A R
3. 2 6 4 1 2
3 + 15 = 18
இனிசியல் - 3 = குரு
பெயர் - 15 = 6 சுக்கிரன்
மொத்த எண். 18 = 9 = செவ்வாய்
முதலில் இனிசியல் மூளையில் பதிந்து பிறகு மேல்மனம், அடிமனம், ஆழ்மனம் கருமையம் என படிப்படியாக பதிவாகி ஜீவ காந்தமாக செயல்பட்டு உடலை இயக்கிக் கொண்டே, வான்காந்த பதிவாகி பிரபஞ்சத்தோடு தொடர்பு ஏற்படுத்தி வருகிறது.
இனிசியலின் இயக்கம் அந்தந்த கிரகத்தின் தன்மையை பொருத்து குறிப்பிட்ட காலம் இயங்கி பிறகு பெயரின் பதிவு செயல்பட ஆரம்பிக்கும் பிறகு மொத்த எண்ணினுடைய பதிவு செயல்பட தொடர்ந்து எண்ணினுடைய பதிவு செயல்பட தொடர்ந்து மாற்றி, மாற்றி செயல்பட்டு கொண்டே இருக்கும்.
மேலே குறிப்பிட்டபடி முதலில் குரு கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்படுவார்.
பிறகு சுக்கிரனின் ஆதிக்கத்திற்கு உட்படுவார். இவ்வாறு மாறி மாறி இதே கிரகங்களின் ஆளுமையில் அவருடைய வாழ்க்கை சக்கரம் சுழன்று கொண்டிருக்கும்.
K.K R A J A S E K A R
2 2 2 1 1 1 3 5 2 1 2 = 7
4 + 18 = 22
இனிசியல் 1+7 = 4
பெயர் மொத்த எண்
S.M J A Y A B H A R A T H I
3 4 1 1 1 1 2 5 1 2 1 4 5 1
7+ 24 = 31
72 + 4 = 6 3 + 1 = 4
இனிசியல் பெயர் எண் மொத்த எண்.
இவ்வாறு பெயரை மூன்றாக பிரித்து இனிசியலின் பலத்தையும், பலவீனத்தையும் அறிந்து ஒரு எழுத்தை கூட்டியோ குறைத்தோ நம் வாழ்க்கையை சரி செய்து கொள்வது ஊர் பெயரின் முதலெழுத்தையோ, தாயாரின் பெயரின் முதல் எழுத்தையோ சேர்த்து வலிமைப்படுத்திக் கொள்வது வழக்கம்.
இனிசியல் என்பது ஒரு ரயிலுக்கு டிரைவரை போன்றது. இனிசியலுக்கு என்று ஒரு வலிமை உண்டு.
NAMELOGY (பெயரியல்)
ஒருவருடைய பெயர் எல்லோராலும் கூப்பிடும் பெயராகவும் இருக்கலாம். அல்லது கையெழுத்திடும் பெயராகவும் இருக்கலாம். இதில் கையெழுத்திடும் பெயருக்குத்தான் வலிமை மிக மிக அதிகம். கூப்பிடும் பெயர் 4 வயது வரை மட்டுமே வேலைசெய்யும். பிறகு அவர்கள் தனது மூளையில் தன் பெயரின் எழுத்துக்களை பதிக்க செய்கின்ற பொழுது அத்தகைய பதிவின் செயல்பாடு வலிமையாக செயல்படுகிறது.
ஒருவருடைய பெயர் எவ்வளவு வலிமையாக உள்ளதோ அந்தளவிற்கு அவருடைய செயல்பாடுகளில் வலிமை அதிகமாக இருக்கும். ஒருவரை குறிப்பிடும் பொழுது இன்னார் என அவருடைய பெயரை குறித்து தானே பேசுகிறோம். பெயரை வைத்து தான் அவருடைய உருவத்தையும் நம் மனம் எடுத்துக் காண்பிக்கிறது. பெயர் மகா வலிமை பொருந்தியது. சிலர் இனிசியல் என தனியாக இல்லாமல் பெயரை மட்டும் கையெழுத்தாக இடுவது உண்டு.
ஒருவருடைய பெயரை விட்டு விட்டு அவரைப் பற்றி சிந்தித்து பாருங்கள் எதுவும் நினைவில் கொள்ள இயலாது. பெயரே அவராகவும், அவரே பெயராக அமைந்துள்ளது. அவர் இல்லை என்றாலும் பெயர் இவ்வுலகில் நிலைத்து நிற்கும். அத்தகைய பெயரை பெற்றுக் கொள்வது மிக மிக அவசியம். நம்மோடு பல பெயர்கள் வாழ்கிறது. பெயர்களுக்குரியவர்கள் இல்லை. குறிப்பாக எம்.ஜி.ஆர்., ஜவஹர்லால் நேரு, காந்திஜி ... என பல பெயரை நாம் இன்றும் உபயோகிக்கிறோம். அத்தகைய பெயரை பெற பெருந்தவங்கள் பெரிய அதிர்ஷ்டங்கள் செய்திருக்க வேண்டும். இத்தகைய பெயரை பெறுவதற்கு என்ன பிரதிபலன் செய்தாலும் ஈடாகுமா என்றால் கண்டிப்பாக ஈடாகாது. பெயரே நாமாகவும் நாமே பெயராகவும் இருந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இத்தகைய பெயருக்கு ஒரு பலன் உண்டு. இத்தகைய பெயரே நம்மை ஆளுமைப்படுத்துகிறது. நம் செயல்பாடுகளுக்கு முக்கிய அங்கம் வகிக்கிறது என்றால் அதை நாம் எவ்வாறு உள்ளது என அறிய வேண்டாமா? இதுவே பகுத்தறியும் தன்மையில் ஒரு பாகமாகும்.
இதில் இனிசியல் இல்லாமல் பெயருக்கு என்று ஒரு கிரகம் உண்டு. பெயருக்கு என்று ஒரு வலிமை உண்டு. இத்தகைய பெயருக்குரிய கிரகம் பிறந்த தேதியோடு ஒப்புமையாக அமையும் பட்சத்தில் மேலும் நன்மைகள் ஏற்படும். பெயருக்கு ஆரம்ப எழுத்து உண்டு. முடிவு எழுத்து உண்டு. எத்தகைய எழுத்துக்களை மாலையாக தொகுக்கப்பட்டுள்ளது என்பதை பொருத்தும் அதன் வலிமையை கூறமுடியும்.
இனிசியல் டிரைவர் என்றால் பெயர் இன்ஜினை போன்றது. ஒரு ரயிலுக்கு டிரைவரும் முக்கியம். இன்ஜினும் முக்கியம் என்ற அடிப்படையில் இன்ஜினின் தன்மையை பொறுத்தே டிரைவர் தனது வேலையை செயல்படுத்த முடியும். இனிசியலுக்கு என்று தனித்தன்மை உண்டு. அது பெயரின் தன்மையை பொறுத்தே அதன் செயல்பாடு அமையப்பெறும்.
பஞ்சபூதம்(EARTHETIC FIVE ELEMENTS)
ப்ருதிவி - திரு.காஞ்சி
அப்பு - திருவானைகாவல்
தேயு - திருவண்ணாமலை
வாயு - திருக்காளத்தி
ஆகாயம் - சிதம்பரம்
இந்த உலகம் பஞ்சபூதங்களால் ஆனது. அவை நிலம், நீர், நெருப்பு, காற்று, விண் என்பனவாகும். இதன் தோற்றம் விண்ணிலிருந்து காற்றாகவும், காற்றிலிருந்து நீர் ஆகவும், நீரிலிருந்து நெருப்பாகவும், நெருப்பிலிருந்து எரிமலை குழம்பு மூலம் நிலமாக பரிணாம வளர்ச்சியை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இத்தகைய பஞ்சபூதங்களின் தொடர்புகள் தான் நம் உடலிலும் அமையப் பெற்றுள்ளது. ஜீவ உயிர்கள் யாவும் பஞ்ச பூதங்களால் ஆனது. ஜடப் பொருட்கள் என்று கூறப்படுவது பஞ்சபூதங்களால் ஆனது. அந்த காலத்தில் பஞ்சபூதங்களை தெய்வங்களாக கொண்டாடினார்கள். நாம் தெய்வமாக கொண்டாடும் ஒவ்வொரு சடங்கிற்குள்ளும் பல சூட்சும முடிச்சுகளை போட்டு வைத்துள்ளனர். அதன் அருமை, பெருமைகளை எண்ணி வியப்படைந்து கொண்டிருக்கும் இவ்வுலகம், நம் கலாச்சாரங்களைத் தனித்து பார்வையிடுகின்றனர். நாம் அதில் உள்ள சூட்சமங்களை அறியாமல் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருக்கிறோம். இந்தியாவில் உள்ள ஆலயங்கள் யாவும் பஞ்சபூதங்களையும் நவக்கிரகங்களையும் மையமாக வைத்து தான் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த பஞ்சபூதகளில் ப்ருதவிலிங்கம் என்று அழைக்கப்படும் நிலத்திற்கு அதிபதியாக காஞ்சி அமைந்துள்ளது. நீருக்கு அப்பு லிங்கமாக திருவனைக்காவலும். சிவதலங்களில் தேயு லிங்கமாக திருவண்ணாமலை அமைந்துள்ளது. வாயு லிங்கமாக திருகாளத்தியும், ஆகாயலிங்கமாக சிதம்பரமும் அமைந்துள்ளது. இவ்வாறு பஞ்சபூதங்களை மையமாக வைத்து கோவில்கள் அமையப் பெற்றுள்ளது.
எண்கணிதத்தில் பஞ்சபூதங்களின் பங்கு மிக முக்கியமாக அமைந்துள்ளது. ஒவ்வொருவருடைய தொழில் ஆற்றலையும் உயிர் ஆற்றலையும் இயக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு மனிதனின் பிறந்த தேதியில் ஒரு பூதம் அடிப்படையாக அமையப்பெறும். அது இல்லாமல் இரண்டு பூதங்கள் பிறந்த தேதியோடு தொடர்புடையதாக கண்டிப்பாக அமையப்பெறவேண்டும். அவ்வாறு அமையுமானால் அவர் இப்பூமியில் வாழத் தகுதியுடையவராக ஆவார்.
தமிழ் எழுத்துக்களை எண்கணித முறைப்படி பஞ்சபூதத் தத்துவத்தில் ஐந்து எழுத்துக்களை மட்டும் பகிர்ந்து அளிக்கிறார்கள்.
அதாவது,
அ - நிலம் - ப்ருதிவி - 1
இ - நீர் - அப்பு - 2
உ - நெருப்பு - தேயு - 3
எ - காற்று - வாயு - 4
ஒ - விண் - ஆகாயம் - 5
இவ்வாறு ஐந்து எழுத்துக்களை மையமாக கொண்டு பஞ்சபூதங்களுக்கிடப்படுகிறது. இந்த ஐந்து பூதங்களை மையமாக வைத்து தமிழ் எழுத்துக்களை அடக்கிவிடலாம்.
சு – க் + (அ) = நிலம்
இ – க் + (இ)= நீர்
இவ்வாறு அனைத்து எழுத்துக்களையும் வடமொழி எழுத்துக்கள் உட்பட பஞ்சபூதங்களின் அடிப்படையில் கணக்கிட முடியும்.
ச ங் க ர்
1 2 1 2 = 6/5 = மீதி 1 = நிலம்
கார்த்திக்
1 2 2 2 2 = 9/5 = மீதி 4 = காற்று
ப்ரூதிவிராஜ்
2 3 2 2 1 2 = 12/5 =மீதி 2 = நீர்
ஓம்பிரகாஷ்
5 2 2 1 1 2 = 13/5 = மீதி 3 = தீ
இவ்வாறு ஒவ்வொரு எழுத்துக்கும் உள்ள எண்ணை தொடர்புப்படுத்தி கூட்டிக் கொள்ளவேண்டும். இவ்வாறு கூட்டிய எண்ணை ஐந்தால் வகுக்க வரும் மீதியை அவருடைய பஞ்சபூதத் தன்மையாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
சங்கர் = நிலத்தின் தன்மையில் பெயர் உள்ளது.
கார்த்திக் = காற்றின் தன்மையில் பெயர் உள்ளது.
ப்ருதிவிராஜ் = நீரின் தன்மையில் பெயர் உள்ளது.
ஓம் பிரகாஷ் = நெருப்பின் தன்மையில் பெயர் உள்ளது.
காந்தி
1 2 2 =5 – 5 = 5 = விண்
மீதி 0 வருமானால் 5 என்று எடுத்து கொண்டு விண்ணின் தன்மையை உடையது என வைத்துக் கொள்ளவும்.
பிர்லா
2 2 1 = 5 - 5 = 0 = 5 விண்
ரஜினிகாந்த்
1 2 2 1 2 2 = 10 - 5 = 0 = விண்
இவ்வாறு கணக்கில் கொள்ளவேண்டும். ஒருவருடைய பெயர் எந்த பூதத்தின் தன்மையில் அமைந்துள்ளது என அறியலாமே.
பிறந்த தேதியில் அமைந்துள்ள பூதத்தோடு பெயரில் உள்ள பூதம் ஒப்புமையாக அமையும் பட்சத்தில் மிக உன்னத நிலையை அடைய முடியும்.
பிறந்த தேதி 1 எனில் நிலமாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
2, 7, 12, 17, 22, 27, தேதிகள் நீரை அடிப்படையாக கொண்டு இயங்கும்.
3, 8, 13, 18, 23, 28 தேதிகள் நெருப்பை அடிப்படையாக கொண்டு இயங்கும்.
4, 9, 14, 19, 24, 29 தேதிகள் காற்றை அடிப்படையாக கொண்டு இயங்கும்.
5, 10, 15, 20, 25, 30 தேதிகள் விண்ணை அடிப்படையாக கொண்டு இயங்கும்.
இதில் எந்த பூதத்தின் தன்மையில் ஒருவர் பிறந்துள்ளாரோ அந்த பூதத்திற்கு சாதகமான பூதத்தின் பெயர் அமையவேண்டும்.உதாரணத்தில் நீரின் தன்மையில் பிறந்தவருக்கு நெருப்பின் தன்மையில் பெயர் அமையக் கூடாது. நீருக்கு, நெருப்பு எதிர்மறையான வினை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவ்வாறு பஞ்சபூதங்களை அடிப்படையாக கொண்டு பெயர் அமையும் பட்சத்தில் உயிர் ஆற்றலும், தொழில் ஆற்றலும் பாதிக்காமல் இருக்கும்.
ASTROLOGY (ஜாதகம்)
எண்கணிதத்தில் ஒரு அங்கமாக வகிப்பது ஜாதகம் ஆகும். ஒருவருடைய வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக ஜாதகம் அமைந்துள்ளது. ஒரு ரயிலில் தண்டவாளங்கள் அமைந்திருக்கும் நிலையில் ஒரு தண்டவாளமாக அமைந்து நிலையாக அமையப்பெற்றிருக்கும்.
ஜாதகம் என்பதே சாதகம் என்பது தான் பொருள். ஒருவருடைய வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை (சாதகமான) தெரிந்து கொள்வதற்கு பெரிதும் உதவுகிறது.
ஒரு சிலருக்கு மட்டுமே பாதகமும் அமைந்திருக்கும். அவர்களும் பயப்பட தேவையில்லை. சாதகத்தில் ஏற்படும் பாதகத்தை இயற்கையே மாற்று வழிகளை ஏற்படுத்தி அதையும் சாதகமாக்கிவிடும். அந்த இயற்கையின் செயலை நாம் செம்மையாக செய்யவிடவேண்டும். அதற்கு பெயர் சரியாக இருந்தால் தான் செயல்படும். தட்ப வெப்பநிலையின் வெளிப்பாடு எங்கு சாதகமாக அமைகிறதோ அங்கு உயிரினங்கள் மிகுந்துக் காணப்படும் என்பது இயற்கை. உலக நாடுகளில் மிக சாதகமான தட்ப வெப்பநிலை ஆசியா கண்டத்தில் மட்டுமே உண்டு என்பதாலேயே இங்கு மக்களின் எண்ணிக்கை உலக நாடுகளோடு தொடர்புபடுத்தும் பொழுது அதிகமாக இருப்பது தெரிகிறது. நம் மக்களுக்கு தலை முடி ஏன் கருப்பாக அமைந்துள்ளது எனவும், பிற நாட்டில் (வெள்ளைக்காரர்கள்) மக்களுக்கு ஏன் வெண்மையாக இருக்கிறது என்பது இயற்கையின் தற்காப்பு ரகசியம். இங்கு வெயில் அதிகம் என்பது கருப்பு நிறம் நம் மூளையை தாக்காமல் வெப்பத்தை பிரதிபலித்து விடும் என்பதால் அமையப்பெற்றுள்ளது. இதற்கு நேர் மாறாக குளிர் பிரதேசத்தில் குளிர் தாக்காமல் இருக்க வெள்ளை நிறமாக அமைந்துள்ளது.
நெகம் எதற்கு? என்றால் தற்காப்புக்காக என அடுக்கி கொண்டே போகலாம் இவ்வாறு இயற்கையே தனக்குத் தானே பாதுகாக்கும் ஒரு வேலையையும் செய்து கொள்கிறது.
ஒரு சிலருக்கு மட்டுமே பாதகமான பலன்கள் அமையப்பெறும். உதாரணமாக விஷ உணவை உட்கொள்ள வேண்டும் என அமையப்பெற்றுள்ள ஒருவர் வெளியில் தண்ணீர் குடித்தல் கூடப் பார்த்து தான் குடிப்பார். இது மற்றவர்களுக்கு "இப்படியும் ஒருவரா" எனத் தோன்றும். இது ஜாதக ரீதியாக விஷ உணவை உட்கொள்ள வேண்டும் என்று ஜாதகருக்கு நிபுணர் கூறும் பொழுது அறிவுரை கூறுவார். அப்பொழுது அவரே நான் இவ்வாறு தான் இருக்கிறேன் என கூறும் பொழுதுதான் இதன் உண்மை புலப்படும். இதையும் மீறி விஷ உணவை உட்கொள்ளும் பொழுது உடனே வாந்தி, பேதி ஏற்பட்டு வெளியேற்றிவிடும். விஷ உணவு என்பது பழைய உணவாக இருக்கலாம். பழைய எண்ணை (அ) பூச்சிகள் விழுந்தும் இருக்கலாம். இவ்வாறு தனைத்தானே தற்காத்துக் கொள்ளக்கூடிய தன்மை இயற்கைக்கு உண்டு.
இவ்வாறு சாதகமானவற்றை ஜாதகத்தின் அடிப்படையில் தெரிந்துக் கொண்டு செயல்படும் பொழுது சாதகத்தை ஊக்கப்படுத்தலாம். பாதகமான பலன்களை தவிர்ப்பதற்கும் பெயரில் அமைக்கலாம். எண் கணித நிபுணருக்கு ஜாதகம் மூலம் ஒருவருடைய இயற்கையான விதி என்ன என்பதை அறிந்து கொள்ள உதவும். இந்த இயற்கையான விதியை அடிப்படையாக வைத்து செயற்கையான விதியை அமைக்க முடியும். ரயிலில் தண்டவாளம் இரண்டும் ஒரே சம அளவு இடைவெளியில் சரியாக அமையவேண்டும். அவ்வாறு அமையும் பட்சத்தில் பிரயாணம் சிறப்பாக செய்யமுடியும். இவ்வாறு ஒரு தண்டவாளம் இன்னொரு தண்டவாளமும் ஏறுக்கு மாறாக அமையுமானால் பிரயாணம் தடைப்படும். இயற்கை விதியோடு செயற்கை விதி ஒன்றுக்கொன்று ஒப்புமையாக அமையவேண்டும். அமைந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.
ஜாதகம் பெயர் ஜாதகம்
பெயர்
img
தண்டவாளம் தண்டவாளம்
(சரியானது) (தவறானது )
ஒருவர் பிறக்கும் பொழுது அவரை சுற்றி நவக்கிரகங்களும் அமையப் பெற்றுள்ளது. அதன் தாக்கம் இவருக்கும் எந்தளவிற்கு நன்மையாக அமைந்துள்ளது என்பதை அறிந்துகொள்ள எட்டு வகையாக பிரித்து உணர்வார் எண் கணித நிபுணர்.
ஒரு கிரகம் எந்த மாதிரி
ஒரு கிரகம் ஒருவருக்கு எப்படி உள்ளது என்பதை Poor , Very Poor ,Normal , Bottom , Good , Very Good , Excellent , Top Most என எட்டு பிரிவாக பிரிந்த எந்த நிலையில் அமைந்துள்ளது என அறிவார்.
அதே போல் பன்னிரண்டு வீடுகளும் எப்படி அமைந்துள்ளது என்பதையும் பகுத்தறிவார் தனது ஆராய்ச்சியில் தற்பொழுது யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ என 12 கிரகங்களையும் 12 வீடுகளையும் பகுத்து ஆராய்ந்து எந்தத் திசைகளை சந்திக்கப் போகிறார் அதன் தன்மை, பலன் எத்தகையதாக அமைந்துள்ளது என்பதை பலனை எட்டுப் பிரிவாக பிரித்து பார்த்து Top Most ஆக அமைந்து கிரகத்தை எடுத்து அதற்கு சாதகமான கிரகத்தை எடுத்து பெயருக்கு உபயோகிக்கும் தன்மை அமைந்துள்ளது.
சாதாரணமாக 14-05-1970-ல் பிறந்த ஒருவருக்கு கிரக நிலைகள் எப்படி உள்ளது என அறிய
1 Top most 1 V.G
2 Good 2 Good
3 Good 3 Ex
4 Poor 4 Nor
5 Ex 5 V.G
6 V.G 6 Ex
7 Nor 7 Nor
8 Nor 8 V.G
9 Nor 9 V.G
10 Good 10 Ex
11 Ex 11 Top most
12 Nor 12 Top mo
நடக்கும் திசை முடிய
7= 29-08-1973 -V.G
6= 29-08-1993 -Ex
1= 29-08-1999 -Ex
2= 29-08-2009 -Ex
9= 29-08-2016 -Nor
4= 29-08-2034 -Nor
3= 29-08-2050 -Good
8= 5-03-2057 -V.G
உங்களுடைய பெயர் பலன் அறிய
அதிர்ஷ்டமான பெயரை அமைத்து வாழ்வில் வெற்றி பெறுங்கள்
அதிர்ஷ்டமான பெயர் , அதிர்ஷ்டமான வாழ்க்கை
பெறுங்கள் , அனுபவியுங்கள்
குழந்தைக்கு அதிர்ஷ்டமான பெயர் வைக்க
உங்களுடைய பெயர் பலன் அறிய
உங்களுடைய பெயரை அதிர்ஷ்டமான பெயராக திருத்தி அமைக்க
உங்களுடைய கையெழுத்தை அதிர்ஷ்டமாக மாற்றி அமைக்க
உங்களுடைய தொழிலுக்கு அதிர்ஷ்டமான பெயர் அமைக்க
உங்களுடைய தொழில் பெயரை அதிர்ஷ்டமாக திருத்தி அமைக்க
உங்களுடைய தொழிலுக்கு லோகோ அமைக்க
நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள்.
உங்கள் ,உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய ,பெயர் வைக்க
இனி செய்ய வேண்டியவை
இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா? என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும்.
R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ ,மொத்த எண்ணிலோ 8,16,17,18,22,26, 29,31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும்.
அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE
A, I, J, Q, Y
= 1
B, K, R,
= 2
C, G, L, S
= 3
D, M, T
= 4
E, H, N, X
= 5
U, V, W
= 6
O, Z
= 7
F, P
= 8
என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து
P. M A R Y
8+ 4 1 2 1
8 + 8 = 16
R. J A Y S A N K A R
2+ 1 1 1 3 1 5 2 1 2
2 + 1 7 = 19
S. N. V E N K A T E S H
3 + 5. 6 5 5 2 1 4 5 3 5
8 + 36 = 44
J A P A N
1+1+8+1+5 = 16
C. D A Y A N A
3. 4+1+1+1+5+1 = 16
S H O B A
3+5+7+2+1 = 18
இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும்.
மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம்.
ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம்.
பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும்.
CUT AND paste
=============================================================
NUMEROLOGY APPLICATION FORM:
NAME (signature name)(FEMALE/MALE) :
BIRTH DATE, MONTH, YEAR:
FATHER NAME & DATE OF BIRTH:
MOTHER NAME & DATE OF BIRTH:
GRAND FATHER NAME:
GRAND MOTHER NAME:
Uncle wife NAME &DATE OF BIRTH:
NATIVE PLACE:
YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH:
POSTEL ADDRESS WITH PHONE NUMBER:
YOURS APPLICANT
=============================================================
பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும்.
மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் "தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும்.
உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே.
பெயர் பலனில் உங்களது நடத்தை ,உங்களுடைய சுபாவம் ,உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை ,பொருளாதாரம்,தனித்தன்மை ,வருங்காலம் ,இல்லற வாழ்க்கை ,எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா ,வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும்.
குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம்
SRK
PACKAGES
SUBJECT ANALISING DETAILS
BENEFITS
பலன்கள்
FEES IN RUPEES
BASIC STAGE
(4SUBJ)
ASTRONOMY,
INITIOLOGY,
NAMEOLOGY,
EARTH(5)ELEMENTS
கெடுக்காத பெயர்,
பெற்றோர்களின்
அரவணைப்பு
5,500/=
1 ST STAGE
(11SUBJECT)
ASTROLOGY,
PRONOLOGY,
TRACKING,
NAME aNALISING,
WORD COMBINATION,
SOUND,OCTECLE
சிறப்பான படிப்பு,
உங்களுக்கானதை அனுபவித்தல்,
குடும்ப ஒற்றுமை,
12,000/=
2 ND STAGE
(16SUBJECT)
JEWISH,EARTH,
GRAPHOLOGY,
SIGNATUROLOGY, NAMEANALISING2
சிறப்பானவாழ்க்கை துணைவர்
20,000/=
3 RD STAGE
(20SUBJECT)
PIROMIDOLOGY,
PRO CHART,
VOWELS VALUE,
CONSONANT VALUE,
சம்பாதிக்கும் திறன்
கிரகநன்மை
40,000/=
4 TH STAGE
(25SUBJECT)
tRIANGLE,TRIGRAMS
GREEK
GEOMENTRIC/srk values,
வசீகரமான சூழல்
ஆளுமைதன்மை
மேலும்சம்பாதிக்கும்
திறன்,ஆரோக்கியம்
நட்சத்திர அந்தஸ்து
அதிர்ஷ்டகார்டு,
அதிர்ஷ்டக்கல்
70,000/=
மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும்.
வங்கி கணக்கு விபரம்
BANK DETAIL
BANK: KARUR VYSYA BANK ( K.V.B )
NAME: AKSHAYADHARMAR
A/C.NO:1725172000000223
BRANCH :SAMAYAPURAM
IFSC CODE:0001725
==================================================================================
இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு
1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி ,திருத்தி அமைப்பதன் அவசியம் ,அதன் பலன் கூறுவேன்
2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும்
3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன்
4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன்.
5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன்.
6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் .
நியூமராலஜி, வாஸ்து மேதை ,விஜய் டிவி.புகழ்
சமயபுரம் அக்ஷ்யதர்மர் செல் 9842457516
சமயபுரம் ஆர்ச் எதிரில் , சமயபுரம்,திருச்சி 621112
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment